காதல் நினைவு பெட்டகம்....!

உன் நினைவு வரும் போதெல்லாம்
நினைக்கிறேன் நம் வசந்த கால
நினைவு பெட்டகங்களை - பல
காலம் நாம் சேமித்த நினைவுகள்
நெஞ்ச கூட்டில் பத்திரமாய்....!

வேண்டும் என் உயிர் வாழ வேண்டும்
என்றும் உன் காதல் நினைவில்
கலைந்து போகாமல் - தோன்ற
வேண்டும் மீண்டும் கனவுகளாய்...!

பஞ்சமில்லை இங்கு இன்றளவும்
கண்ணீர் துளிக்கு ஒன்றும்
வசந்த கால நினைவுகள் தான் - ஆனாலும்
தொடர்கிறது இவை கானல் நீராய்.....!


எழுதியவர் : (23-Jun-10, 2:54 pm)
சேர்த்தது : Sherly
பார்வை : 504

மேலே