சிதையும் காதல்
காதல் என்னும் விதை
என்னுள் விருட்சமானதைக் கண்டதும்
அப்பாவோ அதன் ஆணிவேரினைத்
தேடுகிறார்
அம்மாவோ தளிர் நுனிதனை வெட்டுகிறாள்
அண்ணனோ கிளைகளையும்
தம்பியோ இலைகளையும்
சொந்தங்களோ முழுத்
தண்டினையும் வெட்டுகின்றனர்
இதனை அறியாத
என் காதலனோ என் மீது
திராவகம் தனை வீசி
என்னையே சிதைத்து விடுகிறான்.