வாழும் கடவுள் வாழ்வே கடவுள் நீயாக

அர்த்தமுள்ள வாழ்க்கை:

சிறகொடிந்த பறவைகள்
சிறைபிடித்த நிமிடங்கள்
சிந்தனையில் அடித்துவிட
சிதறிப்போகு மனதுக்குள்
சத்தமில்லா யுத்தமொன்று
சாய்ந்ததோ கண்ணீரில்..!

உயிர்மட்டும் போதுமென
உடல்தன்னை விற்றுவிட
ஒழுக்கமது கெட்டுவிட
ஒருசானின் வயிற்றுக்கு
ஒப்பாரியே சாபமென்று
ஒதுக்கப்படும் உறவுகள்..!

கனவுகளைக் கலைத்தபடி
கானல்நீர் வாழ்க்கையினில்
கைபிடித்து நிற்கிறதோ
கல்யாண பந்தலின்முன்
தூக்கியெறியும் எச்சிலிலை
தூரத்துச் சொந்தமென

சாமியென்று தேடிவந்து
சாவுகளை தாண்டிவந்து
காவுகளை கொடுத்துவிட
கடன்தீர்ந்த தென்பவனோ
கோடிகளில் கொழுத்துவிட
கொலைகார னாகின்றான்..!

உயிரில்லா உறவுக்காய்
ஒருகோடி செய்பவனோ
கருணையதை கல்லாக்கி
களவுகளை மதமாக்கி
திமிரென்றக் கருத்தாலே
தன்னினத்தை மறக்கிறான்..!

எங்குமவன் இருக்கின்றான்
எனும்கூற்று மிகையானால்
அலைகின்ற உனக்குள்ளும்
அவனென்றும் தங்கிவிட
அன்பென்ற விதைபோட்டு
அனாதைக்கும் வழிகாட்டு..!

எழுதியவர் : ஜாக் .ஜெ .ஜி (27-Feb-15, 2:18 pm)
பார்வை : 80

மேலே