என் வெண்பா தொகுப்பு

-------------------------------------
எண்ணக் குவியலில் எண்ணியே பாத்தேட
வண்ணம் குழைத்து வடிவானாள் - எண்ணமது
மின்னும் சிரிப்பழகில் வீழ்ந்திட்ட பின்மனதில்
பின்னிடப் பாவில்லை வேறு


உலகக் கோப்பை கிரிக்கட்
--------------------------------------------

மட்டையடி யுத்தத்தில் நம்மனம் மூழ்கிட
மெத்தை இருக்கையின் இன்பம் வரித்திட
சித்தம் சிறைபட்டு சிந்தை சுருக்கியே
நித்தம் கரைந்தது நாள்


Tmt. Shyamala Rajasekar எழுதிய வெண்பாக்கள் பார்த்து
--------------------------------------------------------------------------

அத்தனயும் வெண்பாவில் ஆச்சர்யம் பார்கிறேன்
எப்படியும் ஓர்நாள் எழுதிடுவேன் இப்பாபோல்
இத்தனை காய்சீர் குலுங்கிங்கு காய்த்திட .
எப்படியும் எட்டும்வெண் பா


படிப்பாய் மரபுப்பா
----------------------------

படிப்பாய் மரபுப்பா என்றே பணித்தார்
எசேக்கிப் பெருமகனார் கண்கள் கசக்கி
துடிப்பாய் துவக்கினேன் அவ்வடித் தொட்டே
வடித்தனன் இவ்வடிகள் இங்கு


கருப்பு
-----------

கண்ணில் கருவிழியில் கண்ணிமையின் மையிருட்டில்
மண்ணில் மனிதர்தம் மெய்யுரையில் உள்ளிருக்கும்
கள்ளத்தைக் காரிருள் எண்ணத்தை கண்டுநம்
உள்ளத்தே உள்ளல் உவர்ப்பு

நடை பாதை நந்திகள்
----------------------------------

கோடிகள் கொட்டியாங்கே வீடுதனைக் கட்டிடுவர்
வீதியில் வைத்திடுவர் வாகனத்தை பாதகர்கள்
மேதினியில் இச்செயலால் பாதையின்றிப் பேதைகள்
மோதலில் நீப்பர் உயிர்

குறட் பாக்கள்
----------------

பார்வை பகிர்தல் கருத்துக்கள் தேர்வு
எழுத்தில் விழுந்தார் கடன்

குடிநீர் தொலைபேசி மின்சார வாரியங்கள்
கொன்றே குவித்த தெரு

தோண்டிற் புதுவீதி தோண்டுக அஃதிலார்
தோண்டலின் தோண்டாமை நன்று

நீள்தொடர்கள் இல்லாத போது சிறிது
வயிற்றிர்க்கும் ஈயப் படும்

காய்கறி வாங்க கடனட்டை தேவையே
வீங்கும் விலைவாசி கண்டு

வீங்கும் கடனட்டை பாரம்தான் தீர்க்கவே
நீங்கா உழைப்பே துணை

சில்லரை சேர்த்தல் உயர்மதிப்பு போகுமந்த
கல்லரைக்கு அஃதே உயர்வு

சிந்தனையே வெண்பாவாய் சிந்திய முத்தாய்
சிறப்பான பாக்கள் இனிது

கொட்டும் அருவியென வெண்பாவை கண்திரை
கொட்டாமல் பார்க்க வியப்பு

எழுதியவர் : Murali (2-Mar-15, 3:09 pm)
பார்வை : 185

மேலே