காதல்செய்கிறேன்

பசியும் தூக்கமும்
மாறிப்போனது..
பாவி மனம் ஊர் சுற்ற
எங்கே போனது ..

சில்வண்டு சப்தம் அறிவேன்..
பூச்செண்டு மென்மை அறிவேன்..
தேன் எடுக்கும் யுத்தம் மட்டும்
இன்றுவரை புரியவில்லை..

கவிதை வரைய முனைகிறேன்..
காற்றில் சேலை நெய்கிறேன்..
நிலையைக் கொஞ்சம் உணரும்போது .
நான் காதல் தீயில் நெளிகிறேன்..

வறுமை கண்டதில்லை
இன்று வெறுமை என்று ஒன்றுமில்லை..
உன் கண்மை கண்ட பின்னே . . நான்
ஒருமை என்பதை மறுக்கிறேன்..

காகிதத்தில் உன் பெயரெழுதி ..
கண்ணுக்குள் ஒற்றுகிறேன்..
உன் சுவாசம் பெற்ற தென்றலை தேடி
இப்புவி எங்கும் தேடுகிறேன்..

தொடரும்..க நிலவன்..

எழுதியவர் : க நிலவன் (3-Mar-15, 8:09 pm)
பார்வை : 82

மேலே