நடித்தது போதும் மனசே

நடித்தது போதும் மனசே ...!!!
-----------------------------------

ஓ நெஞ்சே ....
என்னவனுடன் கூடியபோது ...
என்னுடன் சேர்ந்து நீயும் ...
கூடினாய் இன்புற்றாய்....!!!

எதற்காக ...?
இப்போ நடிக்கிறாய் ...?
என்னவன் கெட்டவன் என்று ...?
நடித்தது போதும் மனசே ...
என்னவனோடு இணைந்துவிடு ...!!!

குறள் 1246
+
கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய்
பொய்க்காய்வு காய்திஎன் நெஞ்சு.
+
நெஞ்சொடுகிளத்தல்
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 166

எழுதியவர் : கே இனியவன் (4-Mar-15, 9:39 pm)
பார்வை : 88

மேலே