ஒரு முறையாவது சொல்லிவிடு
வாசலில் கோலமிடும் பெண்ணே
என்னை கொஞ்சம்
உன் கண்களால் கோலமிடு..!
கல்லூரி செல்லும் பெண்ணே
புத்தகம் மட்டும் படிக்காமல்
உனக்கென நான் எழுதிய
புதுக்கவிதையையும் படித்து விடு ...!
கண்ணுறங்க செல்லும் பெண்ணே
என் கண்கள் மூடுவதற்கு முன்னே
என்னை உனக்கு பிடிக்குமென்று
ஒரு முறையாவது சொல்லிவிடு ...!