நீ வருவாயென
உயிரே என் உயிரே
உனக்காய் நான் இங்கே
இறந்தும் இறவாதவளாய்
உயிர் வாழ்கிறேன்
நீ என்னை தேடி வருவாய்
எனும் நம்பிக்கையில்
என் உயிரை உன் உதட்டில்
புதைத்து வைத்தேன்
விரைந்து வா
ஒரு முத்தம் தா
மீண்டும் பிறந்து உன்னவளாய்
வாழ்கிறேன்