தறிகெட்டு துடிக்கின்றது ஒரு இதயம்

வேதனையில் தவிக்கும்
என்னுயிரின்
சுரமற்ற குரல் கேட்டு
தறிகெட்டு துடிக்கின்றது
ஒரு இதயம்...!

அருகில் அமர்ந்து
அள்ளி அனைத்து
ஆறுதல் சொல்லிட
ஏங்கித் தவிக்குது
என் மனது...!

காற்றே நீயும்
தூது செல்லு
என் அன்பின் அணைப்பை
அவளிடம்
விட்டுச் செல்லு...!!!

எழுதியவர் : விக்கிரமவாசன் வாசன் (16-Mar-15, 11:33 pm)
பார்வை : 84

மேலே