எவனிடம் ஏமாந்தாளோ

மை இருட்டில்
மயங்கிக் கிடக்கும்
மதியைக் கண்டு வியந்தேன்...

தனிமைத் தருணமதைத்
தாங்கிக் கொண்டு
தற்கொலைக்குத் தன்னைத்
தள்ளிக் கொள்ளாமல்
தானாக இன்னும்
மிளிர்வதைக் கண்டு...

பொறுமையானவள் நிற்கின்றாள்
வெறுமையாக உடன்
வெண்மையாக...

"எவனிடம் ஏமாந்தாளோ"..?? காதல் கொண்டு...


செ.மணி

எழுதியவர் : செ.மணிகண்டன் (17-Mar-15, 10:23 am)
பார்வை : 495

மேலே