பிரியத்திற்கு பிறந்தநாள் - சந்தோஷ்

தமிழ் போல சில
மூன்று எழுத்துகள் தான்
ஓர் உறவு ஊஞ்சலை
எந்தன் கவிதைக்காட்டில்
கட்டியது. -இந்த
மூன்று எழுத்துதான்
அவ்வூஞ்சலில் எனை
ஓர் அன்பில் தாலாட்டியது.

” அண்ணா” என
மூன்றெழுத்தை அழைக்கும்
பிரியத்திற்குரியவர்களில்
ஒருவள், இவள்
மூன்றெழுத்துடையவள்
”பிரியா” என் தங்கை.

முத்தமிழ் இனத்தில் பிறந்த
நாங்கள் உடன்பிறப்புக்களே.!
ஓடிப்பிடித்து விளையாடிய
மைதானம் எல்லாம்
இந்த எழுத்துத்தளமே..!

பொம்மைகளுக்கு பதிலாக
உயிரெழுத்துகளையும்
மெய்யெழுத்துகளையும்
சேர்த்து வைத்து
படைப்புகளாக்கி
இலக்கியச்சோலையில்
விளையாடும் நாங்களும்
அண்ணன் - தங்கை எனும்
கவிதைகளே..!

இத்தளமறிந்த பிரபலம்-இனி
உலகமறியும் எழுத்தாளனி
”கதையரசி” ப்ரியா ஐசு-க்கு
இன்று பிறந்தநாள்.
-----

தங்கையான மங்கையே !
என் தோழியான பெண்மையே !
”இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் டா”

எதுவும் யாவும் உன் வசமாகும்
உன் நல்லமனதிற்கு என்றென்றும்
நிம்மதி செல்வங்கள் கிடைக்கப்பெற்று
தமிழ் போல இனிமையூறும் அமுதமாய்
வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்

வாழ்க! நீடுழி வாழ்க..!

---------------------------------------

அன்பு அண்ணன்
-இரா.சந்தோஷ் குமார்.

எழுதியவர் : இரா. சந்தோஷ் குமார் (19-Mar-15, 11:09 am)
பார்வை : 7011

மேலே