என்னை சாய்த்தாலே

அன்று,
என்னுள்ள துடிப்பு அதிகமாய் இருந்தது
என் கடிகார முள் அசைய மறுத்து நின்றது
இமைப்பது தான் கடமை என்பதை
என் இமைகளும் ஏனோ மறந்தது
சற்றும் இடைவெளி இன்றி பேசும் என் உதடுகள்
பேச வார்த்தைகளை தேடியது
இனி வரும் நாட்கள் எல்லாம் இது போல் இருக்குமா
என்கின்ற ஆசை மனதோடு எழுந்தது
ஆம்... சந்தேகம் வேண்டாமடி
அது உன்னை நான் முதல் முறை பார்த்த நாள்…!!!

எழுதியவர் : தண்டபாணி @ கவிபாலன் (28-Mar-15, 7:54 pm)
சேர்த்தது : L.S.Dhandapani
பார்வை : 111

மேலே