மறந்தேனா அ மறுத்தேனா

கவலைகளை கொட்டிதீர்க்கவும்,
காதலை குத்திக்கிழிக்கவும் ,
எதிரிகளை தட்டிக்கழிக்கவும் ,
எதார்த்தங்களை எட்டிப்பார்க்கவும் ,
கொடூரங்களை குடைந்து எறியவும் ,
சாதியத்தின் சட்டை பிடிக்கவும் ,
சாக்கடைகளை தட்டிக்கேட்கவும் ,

கவிதை எழுதிய நான்
ஏன் மறந்து போனேன்?

கவலைகளை களைந்து எறியவும்,
காதலை கட்டி தழுவவும்,
எதிரிகளை தோழனாக்கவும்,
எதார்த்தங்களை எதிர்நோக்கவும்,
கொடூரங்களை வேட்டிப்போடவும்,
சாதியத்தை புறந்தள்ளவும்,
சாக்கடைகளை சுத்தம் செய்யவும்.
.

எழுதியவர் : தமிழ் ஹாஜா (29-Mar-15, 1:49 pm)
பார்வை : 52

மேலே