பிரியா தோழனே
பிரிந்து சென்ற
மேகங்களைக்கூட
ஒன்று சேர்த்து
பார்க்க வந்தாய்
நீ என்னை......
உன்னை பார்த்த
நொடியில்
துள்ளிய என்
இதயத்தையும்
்பொறுமைய்யாக
இருக்கசெய்தது எனது வகுப்பறை
உருவம்மில்லா உன்னை
என் கைச்சிறையில் சிறைப்பிடிக்கச்சொல்லியது எனது உள்ளம்
விழியும் இமையுமாய் உன்னுடன் வந்த உன்
இடி மின்னலயீயும் பயம் மறந்து நான் ரசிக்கத் தொடங்கிய நேரம்
அடித்த
மணியோசையில்
உணர்ந்தேன்
்என் வகுப்பு
முடிவடைந்தது
என்று
மனம்கொள்ளா
ஆசையில் உன்னை சிறைப்பிடிக்க வந்த
என் கண்கள் தான் தன் விழிகளில்தவிப்புடன் நின்றிறுந்த என்
அன்னையைக் கண்டது.....
ஏனோ.....
பள்ளிக்கு மழையில்......
குடையுடன் வந்து
நிற்கும் அவர்க்குத் தெரியவில்லை
உனக்கும் எனக்குமான
சிநேகம்