மனிதத்தை விலை பேசும் மாபெரும் கவிஞர்களுக்கு

பெண் பல் இளித்துச் செல்ல
இங்கு சிலர்
வால் பிடித்துச் செல்வார்
என்ன கொடுமை என்றால் இவர்கள் கவிஞர்கள் ..!!

பொய் அன்பெனும் அம்புகொண்டு
நாராக கிழித்த பின்னே
வடிகின்ற உதிரத்தில் பெண் குளிக்க
இங்குபூமாலை சூடுகின்றார் சிலர்
இவர்கள் கவிஞர்கள் ..!!

தவறென தெரிந்துகொண்டு
தாவணி பின் சென்று
தலைநிமிர்ந்து நடந்திடும் இவர்கள்
ம்ம்ம்ம் கவிஞர்கள் ..!!

காதல் இல்லா விட்டால்
கடவுளும் இல்லை
காதலிக்காவிட்டால் இங்கு எந்த
கவிஞனும் இல்லை ..

ஏமாந்து விட்டால் கோழையும்
இல்லை
ஏமாற்றி சென்றவள் பத்தினியும் இல்லை .

புரிந்து கொள்ளுங்கள் கவிஞர்களே
பொய் மட்டும் எமக்கு வாழ்க்கையில்லை
போர்க்கொடி தூக்குவதும்
பெண் பின்னால்
அலைவதும் ரசனையில்லை .

மனிதத்தை மதித்திடுங்கள்
மனித உணர்விற்கு வழிவிடுங்கள்
கவிஞனாய் வாழவெனில்
காழ்ப்புணர்வு துறந்திடுங்கள் .

தவறென தெரிந்திட்டால்
தட்டிக் கேட்க முற்படுங்கள்
தாயாக இருப்பினும்
தப்பென்று உணர்த்திடுங்கள் ...


(இது யார் மனதையும் புண்படுத்துவதற்கு இல்லை .அப்பிடி நடந்தால் மன்னித்து விடுங்கள் )

எழுதியவர் : கயல்விழி (5-Apr-15, 9:24 am)
பார்வை : 401

மேலே