வேண்டுதலாய் சில வேண்டியவைகள் 0 தாரகை 0

மரணம் வரை போராட மிகத்தகுதியான ஒன்று
நம் மனம்!

உறங்கும் வரை கட்டுப்பாட்டில்
இருக்க வேண்டியது
நம் பார்வை!

பேசும் வரை நிதானம்
பேணவேண்டியது
நம் நாவு!

உயர உயர
பணிந்து போக வேண்டியது
நம் அறிவு!

கற்க கற்க
மிளிர வேண்டியது
நம் செயல்!

சொல்ல சொல்ல
பண்பட வேண்டியது
நம் உள்ளம்!

எழுதியவர் : தாரகை (6-Apr-15, 7:59 am)
பார்வை : 116

மேலே