சாத்தியப்படுமோ சகியே

உன் இதழில் பதித்த ஈரத்தை
துடைத்து விடலாம்.
கரம் பிடித்த கரையைக் கூடக்
கழுவி விடலாம்.

மனம் நிறைந்த மகிழ்வையும்
பின் வரும் காலங்களில் -
தினம் வழியும் விழிநீர் வழி
மறந்து விடலாம்.

செவி குளிரப் பேசியதைக் கூட
இனி நமக்கு
பொருத்தமில்லையெனப்
புதைத்து விடலாம்.

விழிகளில் நிறைந்த உன்
உருவையும் -
உணர்வில் கலந்த உயிரையும்
உயிரில் மிதக்கும் சுவாசத்தையும்

மனமுருகிச் செய்த வாக்குறுதிகளையும்
சேதாரமின்றி பிரித்துச்
சலவை செய்வது
சாத்தியபடுமோ சகியே ....

--- " செல்லம்" ரகு ....
திருப்பூர்.

எழுதியவர் : " செல்லம்" ரகு, திருப்பூர். (6-Apr-15, 4:10 pm)
சேர்த்தது : செல்லம் ரகு
பார்வை : 72

மேலே