நினைத்து நினைத்து பார்த்தேன்

பள்ளிப் பருவத்தில்
துள்ளி விளையாடியதையும்
கல்லூரிக் காலத்தில் கரம் கோர்த்து
நடந்ததையும்
எண்ணிக்கொண்டே நகர்கின்றது
நாட்கள் ...

முறைப்பெண் இல்லையென்ற போதும்
முறைசொல்லி நீ அழைத்த கணங்களை
மறுபடி வேண்டி தவம் கிடக்கின்றன
செவிகள் ...

கடக்கரை மணலில் வரைந்திட்ட
காதல் சின்னம் தனை
அலை அழித்திட்ட போது
சிவந்திட்ட உன் முகம் இன்றும்
சிறைப்பட்டு கிடக்கின்றது எனக்குள் ..

அறியாத வயதில் பிறந்திட்ட காதல்
பிரிகின்ற போது புரிந்ததால்
குறை சொல்வேன் யாரை ..?

மலர்ந்த காதலை மறந்துவிட்டதாய்
நீ எண்ணக்கூடும்
அல்லது என்னையும் மறந்திருப்பாய் ....
ஆனால்

என் நினைவுகள் நிழலாக உன்னை மட்டுமே தொடர்ந்திடும் ....!!!

எழுதியவர் : கயல்விழி (8-Apr-15, 10:44 pm)
பார்வை : 1229

மேலே