நீ என் உயிர்

இறைவன் படைப்பின் அழகே..!
தேயாத வெண்மதியே..!
வீதியில் ஓர் வானவில்லாய் வலம் வருபவளே..!

நான் உன்னை பார்த்த நொடி,,
என் வாழ்வின் அதிர்ஷ்டமடி..

சில்லென்று வீசிய தென்றல் காற்று
உன் காற்கூந்தல் அழகை காட்ட
சிந்தையற்று நின்றேனடி...!

என் பார்வை கண்ட நீ
சிரிப்பை மறைக்க
கன்னக்குழி உண்மை காட்டியதடி...!

வெட்கத்தில் சிரிப்பை உன்னுள்
புதைத்த நீ
என் இதயத்தை உடன்
புதைத்தாயடி...!

உன் மதி முகம்
நான் காணும் தரிசனம்
எனவா..?

உன் மான் விழி
நான் கண்டு பருகும் தீர்த்தம் எனவா..?

உன் இதழ்கள்
நான் ஏங்கும் கனவுகள்
எனவா..?

உன் விரல்கள்
நான் கோர்க்க துடிக்கும்
மலர்கள் எனவா...?

உண்மை சொல்லவா....
நீ என் உயிர் அல்லவா...!!!

எழுதியவர் : ஷாமினி குமார் (10-Apr-15, 8:16 pm)
Tanglish : nee en uyir
பார்வை : 1082

மேலே