இஸ்லாமியர்களின் மக்கள் தொகை உயர்வு இந்தியாவுக்கு ஆபத்து - சிவசேனா -

இஸ்லாமியர்களின் மக்கள் தொகை உயர்வு இந்தியாவுக்கு ஆபத்து
- சிவசேனா -

இந்தியாவில் தொடர்ந்து இதுபோன்று இஸ்லாமிய மக்கள் தொகையானது வளர்ந்து கொண்டே சென்றால், இது மற்றொரு பாகிஸ்தானை உருவாக்க வழிவகை செய்யலாம்,

இதனால் எப்போதும் வளர்ந்துவரும் இஸ்லாமிய மக்கள் தொகைக்கு ஆரோக்கியமான, நோயற்ற வாழ்க்கையை வழங்க முடியாது. என்று சிவசேனா தெரிவித்து உள்ளது.

சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அசாம்கானின் பேச்சுக்கு
( இஸ்லாமியர்கள் ஏழைகளாக இருப்பதாலே அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்கின்றனர். ) கண்டனம் தெரிவித்து உள்ள சிவசேனா இஸ்லாமியர்கள் அதிக குழந்தை பெற்றுக் கொள்கின்றனர், எனவே அவர்கள் ஏழைகளாக உள்ளனர்,” என்று தெரிவித்து உள்ளது.

எவ்வளவு நாள் தான் மராட்டிய மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் இந்த சிவசேனா / நவ நிர்மான் கும்பல்...? மும்பையில் மும்பைவாசிகள் நிம்மதியாக வாழவே முடியாமல் நெளிந்து கொண்டிருக்கிறார்கள்...

மும்பை ரியல் எஸ்டேட் - ல் சிவசேனா குண்டர்கள்...இவரின் பங்காளி கட்சியான நவ நிர்மான் குண்டர்களும் தங்களது பிடியில் வைத்துள்ளார்கள்....

கடைகளில் மாமூல்....அடுக்கு மாடி குடியிருப்பு கட்டினால் அதற்கும் மாமூல்... கடை வீதிகளில் மாமுல்....மாதம் ஒரு பண்டிகை கொண்டாட மாமூல்...உச்சபட்சமாக கண்பதி மற்றும் ஆயுத பூஜை தற்பொழுது நவராத்திரி பிறகு தீபாவளி மற்றும் கோலி பண்டிகைகளை இந்த இரு அமைப்பை சேர்ந்தவர்கள் ஏன் கொண்டாடுகிறார்கள்....?

மக்கள் அல்லவா கொண்டாட வேண்டும்.....இவர்கள் ஏன் இந்த பண்டிகைகளை முன்னெடுத்து ஊர்வலம் போகிறார்கள்....?

மக்களிடம் அப்பத்தானே பணம் பிடுங்க முடியும்...? ஒரு வீதிக்கு ஐந்தாறு குண்டர்கள் அணைத்து கட்சியில் இருந்தும்....தெரு, வட்டம், வார்டு, நகராட்சி, மாநகராட்சி, புறநகர் பகுதி என்று இந்த கட்சியில் உள்ளவர்கள் உண்டு கொழுத்து வருகின்றனர்....

மராட்டிய மக்கள் இந்த சிவசேனா மற்றும் நவ நிர்மான் மற்றும் காவி அமைப்புகளை அடித்து துவைத்து விரட்டாமல் நிம்மதியாக இருக்கவே முடியாது....செய்வார்களா வீரம் செறிந்த மராட்டிய மக்கள்...? என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்..!

- சங்கிலிக்கருப்பு -

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (15-Apr-15, 2:38 pm)
பார்வை : 96

மேலே