பெய் மழையே

நள்ளிரவு வரக்கூடாதா
நாலு மணிக்கே வந்துவிட்டதே..
நான் எப்படி வீட்டுக்கு போவேன்
குடையை மறந்தவனின் குமுறல்...

உள்ளே போய் ஏத்தியதெல்லாம்
வெளியே வந்தவுடன் இறங்கிவிட்டதே
குடிகாரனின் குளறல்...

மேகங்களின் கூடல்..

மெதுவான பாடல்..

யாவும் இங்கே மழைக்க்காகவே..

கருப்பு கொடி காட்டி வருகிறோம்
கண்டனமாக எண்ணாதே..

கண்மாய் தொடங்கி
கால்வாய் நிரப்ப மறந்திடாதே..

சீறி வரும் மாரியாகிவிடாதே
சில்லென தூவும் தூரலாகிவிடாதே..

உன் வரவை பார்த்து பார்த்து
பூத்த மனங்கள் குளிர
பெய்யென பெய் மழையே..

எழுதியவர் : முருகேசன் சத்தியமூர்த்தி (20-Apr-15, 10:06 am)
பார்வை : 67

மேலே