இதுவா எனக்கு நீதி
விசாரணை என்ற பெயரில்
காவல் நிலையத்தின்
வராண்டா பெஞ்சுகளின் மீதும்
வாதங்கள் என்ற பெயரில்
வழக்காடு மன்றங்களின்
நீண்ட மேஜைகள் மீதும்
ரேட்டிங்குக்கு அலையும்
ஊடக வெளிச்சங்களிலும்
திறந்தவெளி முற்றங்களில்
திரும்பத்திரும்ப அரங்கேறியது
சபிக்கப்பட்ட ஒரு பின்னிரவில்
இருளான புதர்மறைவில்
நிகழ்ந்துபோன அந்த
காமக்கொடூரம்