ஞானமில்லா விஞ்ஞானம்

மகிழும் பாடி குருவிகளை
கொஞ்சும் தூது புறாக்களை
காணாது எமது நெஞ்சத்தை
கெஞ்சும்படி மிஞ்சிவிட்ட விஞ்ஞானமே.!
ஆக்கத்தை கொடுத்து
கெடுதியாய் சில
தேக்கத்தை உண்டாக்கியது ஏனோ ?

சொர்க்கத்தை படைக்கும்
அறிவியல் கொடும்
நரகத்தை கொடுத்து
ஜீவன்களின்
சதவீதத்தை குறைத்து
என்ன விதையை தூவுகிறாயோ?
இந்த மண்ணில்
விஷ விதையை நீ நடுகிறாயோ ?


உனது அபரித வளர்ச்சிக்கு
பரிகாரமாய்

அழிவுக்கு
முற்றுப்புள்ளி ஒன்று காட்டு
நல் ஆக்கத்திற்கு
தொடக்கப்புள்ளி என்று நீட்டு


-வியன்

எழுதியவர் : வியன் (29-Apr-15, 1:10 pm)
பார்வை : 86

மேலே