இப்படி பண்றீங்களே பராசக்தி

காணி நிலமும்
தூணில் அழகியதாய்
நன்மாடங்கள் துய்ய நிறத்தினவாய்
நிலத்திடை மாளிகையும்
கொடுத்தாய் பராசக்தி

முத்துச்சுடர் போல் நிலவும்
நித்தம் வந்துதான் போகிறது

அங்கு கத்துங்குயிலோசை
காதில் பட்டுக்கொண்டேதான் இருக்கிறது
ரிங் டோன் அதுதான்

ஆனால் பராசக்தி
மேக்கேதாட்டில்
அணையொன்று கட்டிவிட்டால் ..............
கேணியில் நீரும் தென்னை மர இளநீரும்
வற்றிப்போய் விட்டால் .........

காணி நிலம் கால் காசு பெறாதே பராசக்தி

என்னம்மா ...... இப்படி பண்றீங்களேம்மா

எழுதியவர் : பிரணவன் (29-Apr-15, 3:06 pm)
பார்வை : 124

மேலே