தேவதைகள்
கற்பினைப் போல்
என்னைக் காக்கிறது
உன் காதல்!
என் பாதையில்
ஒளியேற்றுகிறது,
உன்
சந்தோஷப் புன்னகை!
தொலைந்து போன
என் ராகங்களைத்
தேடித் தருகிறது
உன்
மகத்தான மௌனம்!
உன்
கண்ணீரில் துடைக்கிறாய்
என் குற்றங்களை..
தேவதைகள் தேவதைகளே...