காதலி காதலீ

வான்மதியின் சாயலோ !
வானவில்லின் நிறமோ

வண்ணமயில் இமையோ
கண்சிமிட்டும் பட்டாம்பூச்சியோ

கார்முகில் கூந்தலோ
கடைக்கண் பார்வையோ

முத்துச்சிதறல்(முல்லை ) புன்னகையோ
சங்கு கழுத்தோ

மார்பு சிகரங்களோ
தொப்புள் சுழலோ

மெல் இடையோ
எந்தன் தலை தாங்கும் (ஏந்தும்) தொடையோ

பூமி தொட ஏங்கும் உன் பாதமோ
இல்லைஅதில் பூத்திருக்கும் நகமோ

இல்லை அந்த கண்ணனின் குழல் இசையையோத்த
உன் குரலோசையோ

இதில் எது என்னை காதலிக்க செய்தது உன்னை

எழுதியவர் : ஞானி(மணிபாபு) (2-May-15, 1:16 pm)
சேர்த்தது : ஞானி மணிபாபு
பார்வை : 114

மேலே