நீரும் திருமாலும் நேர்
உள்ள வழுக்கை அகற்றும் உயர்குணத்தால்
பள்ளத்தை நோக்கியே பாய்வதனால் - துள்ளிவரும்
பாரும் வியந்திருக்க பொங்குதிரை கொண்டுவரும்
நீரும் திருமாலும் நேர்.
அழகா முருகா அழகர் மலையழகா
கள்ளழகா உன்னழகோ நூபுர கங்கையாம்
வெள்ள வழகா விளம்பு.