மனம் மறந்த மனிதம்
தாயின் மடி
சடலங்களால்
நிரம்பி வழிகிறது..
குருதியின் நாற்றத்தில்
மூழ்கி எழட்டும்
பூமி..
அடுக்கடுக்காய்
சிதைந்து ,
சிதறிய
உயிர்கள்..
வெயில் குளிக்கும்
கட்டைகளோடு
கருக்கிக்காயும்
பிரேதங்கள்....
வறுமையின்
எச்சத்துளி
களவாட நினைத்த
செழித்த மரங்கள்..
தற்காப்பு காரணமாய்
துப்பாக்கியின் யாசிப்பை
நிறைவேற்றிய
கண்ணியவான்கள் ...
செம்மரக்கட்டைகளில்
செங்குருதி நீர்
பீய்ச்சி அடிக்கப்பட்டது..
காரணமின்றி
துப்பாக்கி ரவை
அத்துனை மார்புகளையும்
மரித்தது..
மனதில்
மனிதமில்லையா..??
மனிதம்
மனம்
மறந்ததா..??
இருந்தும் என்ன செய்ய
உயிர்கள் போயாச்சே.....