தேர்வில் கோளாறு

உனக்கு..
ஆங்கிலமும் கணக்கும்
கற்றுத்தரச் சொல்லி
நீ கேட்ட போது
சொல்லித் தந்தேன்..
உன்னால் ..நான் ..
கற்றுக் கொண்டது ..
கவிதை!
..
உன் தேர்வுகளில்
என்னால்
வெற்றி பெற்றதாக
சொன்ன போது ..
என்னால்
மகிழ முடியவில்லை..!
..
காதல் தேர்வில்..
நீ என்னை
தேர்வு செய்யாமல்..
அண்ணா ..
என்று பட்டம் சூட்டிய போது
"தமிழா..தமிழா
கண்கள் கலங்காதே"
என்று பக்கத்து டீக்கடையில்
பாட்டு வேறு ..
கர்ண கடூரமாய்!
..
ஒன்று வினாத்தாள்
அவன் கையில்
கிடைத்திருக்க வேண்டும்..
அல்லது ..
நீயே முன்னதாக அவனுக்கு
கொடுத்திருக்க வேண்டும்..!
இல்லையென்றால்
எப்படி ..
இவனைப்போய் ...?

எழுதியவர் : கருணா (6-May-15, 12:14 pm)
Tanglish : thervil golaaru
பார்வை : 313

மேலே