நிலாக்காரியின் கருப்பாட்டம்
ஆதியும் அந்தமுமென்ற
தத்துவக் கோட்பாட்டினால்
நீட்சிகளின் இயலாமையில்
எதைக்கண்டோ
மிரட்சிகளின் மூர்க்கத்தனத்தில்
அந்திக்கோபமாய் கடலைமெத்தையில்
படுத்துறங்கச் சென்ற
சூரியப்புருஷனின் பிரிவால்
வானச்சாலையில்
பெண்மையுள்ள பொன்னிலா
கருப்பு ஆர்பாட்டம் நடத்தியதாம்.
அறியா மனிதயினம் இதை
இரவு என்று சொன்னதாம்.