கண்ணனெனும் நற்கனி - இரு விகற்ப நேரிசை வெண்பாக்கள்

கண்ணனெனும் நற்கனியைக் காசினியில் தந்தீரே
தண்ணொளியாய் எங்களுக்குத் தானேநீர் – திண்ணம்
குமாரசாமி அங்கயர் கண்ணி குலவு
குமாரனைப் பெற்றீர் மகிழ்ந்து! 1

அகச்சுரப்பி யின்இயலுக் கும்நோய்க்கும் ஓ(ர்)இன்
தகவுடைய நன்மருந்தாய் கண்ணா – முகவிருந்தாய்
என்றும் இருக்கின்றாய் எந்நாளும் எல்லோர்க்கும்
நன்றுசெய்தே வாழ்க இனிது! 2

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-May-15, 10:48 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 53

மேலே