தழுவும் இலக்கணங்கள் - இரு விகற்ப நேரிசை வெண்பாக்கள்

எழுதுவதெல் லாம்மரபுப் பாக்களில்லை; முற்றும்
வழுவில்லா நற்பொருள் கொண்ட - தழுவும்
இலக்கணங்கள் உள்ள அலங்கார சொற்கள்
பலவுள்ள பாக்களே பா! 1

அலங்கார சொற்களெல்லாம் பாக்களா காதே
துலங்கும் எதுகையோடு மோனை - இலங்கி
வளமான நற்கருத்தும் சொல்லில் நயமாய்
தெளிவாக உள்ளதே பா! 2

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-May-15, 8:46 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 107

மேலே