படம் பார்த்து கவிதை சொல்லுங்கள்-மிஞ்சிய நஞ்சு
பொய்த்த மழையால்
வந்த
கடன் வெள்ளத்தில்
உழுது உழைத்த
உத்தம தந்தையும்
அன்னையோடு
அன்னம் கொடுத்த வயலும்
அடித்துப் போக.
எஞ்சியது
இந்த வயலினும்
என் பங்கு நஞ்சும்
வயலின் வாசித்து
உணவை யாசிக்கவா?
எஞ்சிய நஞ்சையே
இறுதி உணவாக்கவா?