கவிஞனாக ஆசைப்படுகிறேன்

உன் மீதான என் முதல் காதல்
உனக்காகவே உயிர்விட்டது....
காதல் உணர்வு தானே
அதையே உலகமாய் நினைத்தது
என் தவறா...? இல்லை
அந்த உலகில் உனக்கு
வாழ பிடிக்கவில்லையா....?
நான் காதலில் தோற்கவில்லை...
ஆம்...நீ என்னை விட்டு பிரிந்ததும்
நான் இறந்திருந்தால்
என் காதல் தோற்றிருக்கலாம்.....
நான் இன்னும் உன்னையே
தானே நினைத்து கொண்டிருக்கிறேன்......
உலகில் உள்ள கவிஞர்கள்
காதலித்தார்களா.....? என்று தெரியவில்லை
ஆனால்,நான் காதலித்தேன்...
நான் கவிஞனா என்று தெரியாது
ஆனால் ,உன்னால் உனக்காக
உனக்கு மட்டும் கவிஞனாக ஆசைப்படுகிறேன்..........!

எழுதியவர் : நவீன்குமார் கு (12-May-15, 6:38 pm)
பார்வை : 145

மேலே