கற்பழிப்பிலும் லாபம் தேடும் காட்டு நரிகள் --கயல்

தீவிற்குள் ஒரு தீவில்
தீபமாக எண்ணியவள் .
செடிதனில் அரும்பாகி
மலர்ந்திட விரும்பியவள் .

பள்ளி படிப்பு முடித்து விட்டு
பட்டப் படிப்பு முடித்திடனும்
புத்தகம் தூக்கிய பூவை இவள்
போட்டு வைத்த எண்ணம் இது .

புள்ளி மானாய் துள்ளித் திரிந்தாள்
துரத்துவது புலி என அறியாமல் .
பிடித்தது புலிக்கூட்டம் ஒன்று
புசித்தது பூவையை கசக்கி .

பெண்மையோடு பொன் உயிரும்
போனபின்பு
புலிக்கூட்டம் பதுங்கிக்கொண்டது
நீதியின் பின் .

பிள்ளையை இழந்த பெற்றவர்கள்
கண்ணீரில் குளித்து நிற்கையிலே
லாபம் தேடும் நரிக்கூட்டம்
கூருபோடுது கன்னியின் இறப்பை .

கற்பழித்த காமுகர்கள் கண்ணெதிரே
நின்றாலும்
அரசியல்வாதி கைகோர்த்தோர்
அறிந்திடார் அவர்களைத்தான் .

கருநாள் வெறும் கண்துடைப்பே
இது அரசியலின் கற்பழிப்பே
இறந்தவளுக்கு வழி விடுங்கள்
இனியேனும் அவளை வாழ விடுங்கள்..
:-(:-(:-(:-(:-(:-(:-(:-(:-(:-(:-(:-(:-(:-(:-(:-(:-(.

எழுதியவர் : கயல்விழி (20-May-15, 8:59 pm)
பார்வை : 280

மேலே