பசியின் வலி

இல்லத்துவிழா முடிந்தபின்
இலைகளை....
மீதமிருந்த உணவுகளுடன்
அகற்றிக் கொண்டிருந்தாள்
அச்சிறுமி....

அவளின் கண்கள்
அப்பருக்கைகளின் மீது
படிந்திருந்தது..

பசியின் வலிகளை
அவளைப்போல்...
அறிந்திருக்கவில்லை
அவை....?
--------------------------------------------------------------------குமரேசன் கிருஷ்ணன்

எழுதியவர் : குமரேசன் கிருஷ்ணன் (22-May-15, 12:27 am)
Tanglish : pasiyin vali
பார்வை : 1169

மேலே