நானுணும் இருளும்

என் போலவே வெளிச்சத்தை விரும்பியது,
பின்,
என்போலவே,
வெளிச்சத்தால்,
விரட்டப்பட வேதனையில் அழுதது,
ஒழிந்து நின்று வெளிச்சம் ரசிக்கும் இருள்,
எதிர் நின்றால் ஓடிவிடும் என்போலவே,
நாங்கள் இருவரும் வெளிச்சத்தால்
விரட்ட பட்டவர்கள்,
விரட்ட விரட்ட பழகிகொண்டோம்
தூரம் நின்று வெளிச்சம் ரசிக்க,
என் தனிமைக்கு
துணையான இந்த இருள்
எதையும் காட்டாது வெளியே
என்போலவே உள்ளுக்குள் அழுதழுது,
எத்தனை முயன்றும் வெளிச்சத்துடன் வாழ முடியாமல்,

எழுதியவர் : சபிரம் சபிரா (24-May-15, 4:56 am)
சேர்த்தது : சபிரம்சபீரா
பார்வை : 73

மேலே