முதல் நண்பன்
நினைவு தெரிந்தநாள் முதல்
இன்றுவரை
என் நண்பனாய்
என் வழிகாட்டியாய்..
யாரை யானும்
சொல்ல
எனை ஆளாக்கிய
என்னருமை தந்தையை
சொல்லவா..
காதர் பூங்காவிலே
கால்கடுக்க
என்பின்னே
குதிரையின் மேலே
குதுகலத்தில்
நான்முன்னே..
தன்னலம் பாராது
தன்பிள்ளை மகிழ்வை
பார்க்கும்
பாசமிகு பிதா..
பணத்தின் பெறுமதி
தெரியா பருவத்திலும்
சேமிப்பை கற்றுத்தந்த
ஆசான்..
நாய்க்கும்
பேய்க்குமென
நான் பயந்தாலும்
தைரியத்தை யூட்டி
ஊக்கப்படுத்திய
தோழன்..
நல்லதொரு பிதாவாக
அன்பான ஆசானாக
உற்ற தோழனா
இன்றுவரை..