கூறுகெட்ட விவசாயக் கிழவன்

தொடுவானம் தேடுது மேகம் காற்று
தொட்டு தழுவுததன் தேகம் சற்றென
குறையுமா புதுமண மோகமென வற்றாமல்
இறைக்குது வானமிப் போகம்...-ஊற்றது
உறங்கி இளைப்பாறஒய் வாற்றாமல்
கிறங்கி களைப்புறுகிறான் சேற்றுழுது
சோறுசெய்து குலப்பெருமை சாற்றாது
வேறுபுலம் பெயர்ந்து வெற்றுகோப்புகளில்
பேறுகாணும் விஞ்சானப்பிள்ளை பெற்றெடுத்த
கூறுகெட்ட விவசாயக் கிழவன்....
பேறுகாலம் கடந்த கிழவியிடம்

எழுதியவர் : காசி தங்கராசு (2-Jun-15, 2:14 am)
பார்வை : 66

மேலே