அணங்கவள் என்செய் வாளோ

அந்தியில் ஓவி யங்கள்
****அழித்தழித் தெழுது கின்றாள்
சுந்தரன் வரவை எண்ணி
****சுகந்தமாய் மலர்ந்தி ருந்தாள்
சிந்தையில் அவனை வைத்து
****சிவந்தவள் நாணி நின்றாள்
மந்திரம் செய்தாற் போலே
****மன்னவன் கண்முன் வந்தான் !

அந்தியில் ஓவி யங்கள்
****அழித்தழித் தெழுது கின்றாள்
அந்தகன் அழைத்துக் கொண்ட
****அன்புடைப் பதியை எண்ணி
அந்தரம் மனதை வாட்ட
****அழுதழு தேங்கு கின்றாள்
அந்திரி தேவி காப்பாய்
****அணங்கவள் என்செய் வாளோ ?

( முதல் இரண்டு வரிகளுக்கு ..... இரு வேறு பாடல் )

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (3-Jun-15, 3:40 pm)
பார்வை : 161

மேலே