மீளா காதல்
அவள்
தந்தையின் உயிரை
பிரிக்க இயலாததால்
என் உயிரை
பிரிக்கிறாள்
எனை மறந்துவிடு என கூறி..
எனக்கு
எதிரான நேரங்கள்
யாவும்
கதிராகும் காலமும்
வரும்.
கைகூடா காதல்
(மறு) காதல்
என்றேனும்
கைகூடி வரும்.
அன்று,
களிப்பில்
கைதட்டும் கூட்டத்தின்
நடுவே
உன் கைகளும் தட்டும்
உன்னை இழந்துவிட்டேனே
என்ற ஓசையை..
உனை சுமந்த
என் இதயமும்
திட்டும்
உன்னை தொலைத்துவிட்டேனே
என்ற வசையை..
- மீண்டும் மீளா காதல்