நான்கு மெழுகுவர்த்திகள்

நான்கு மெழுகுவர்த்திகள் எரிந்து கொண்டு
இருந்தன. மெலிதாய்காற்று வீசிக்கொண்டு
இருந்தது..!!
காற்றை கண்டதும்...
'அமைதி‘ என்ற முதல் மெழுகுவர்த்தி ‘
ஐயோ காற்று வீசுகின்றது, நான் அணைந்து
விடுவேன் என்று பலவீனமாக சொன்னது.
காற்று பட்டதும் அணைந்துவிட்டது.
‘அன்பு ‘ என்ற அடுத்த மெழுகுவர்த்தியும்
காற்றை எதிர்க்க முடியாது’ என்று அணைந்துவிட்டது.
'அறிவு‘ என்ற மூன்றாவது மெழுகுவர்த்தியும்
காற்றை எதிர்க்க முடியாமல் அணைந்தது.
நான்காவது மெழுகுவர்த்தி மட்டும் காற்று
வீசிய சிலநொடிகள் போராடி ஜெயித்துவிட்டது.
அப்போது அந்த அறையில் ஒரு சிறுவன் நுழைந்தான்.
‘அடடா மூன்று மெழுகுவர்த்திகளும் அணைந்துவிட்டதே'
என்று கவலையுடன் சொன்னான்.
அதற்கு எரிந்துகொண்டு இருந்த நான்காவது மெழுகுவர்த்தி
சொன்னது, வருத்தப்படாதே நான் இருக்கின்றேன்.
என்னை வைத்து மற்ற மூன்றையும் பற்ற வைத்துகொள்’
என்றது.
சிறுவன் உடனே..
நான்காவது மெழுகுவர்த்தியை பார்த்து
” உன்பெயர் என்ன.?”என்று கேட்டான்..
'நம்பிக்கை' என்றது அந்த மெழுகுவர்த்தி.
நாம் எப்பொதும் வாழ்வில் நம்பிக்கையை மட்டும்
இழக்கக் கூடாது...!!

எழுதியவர் : (6-Jun-15, 3:22 pm)
பார்வை : 379

மேலே