மறந்தால் வாழ்ந்திடுவேனோ
சூரிய ஒளி கொண்டவனே .....
எண்ணங்களை மறந்திடுவேனோ ....
மறந்தால் வாழ்ந்திடுவேனோ....?
உன் நினைவால் ...
என் உடல் மெலிகிறது ....
கைகள் தேய்கின்றன ....
என் அழகும் குறைகிறது ....
நீ வரும் வரை ....
உன் நினைவு ஒன்றுதான் ...
அழகை காப்பாற்றுகிறது ...!!!
+
குறள் 1262
+
அவர்வயின்விதும்பல்
+
இலங்கிழாய் இன்று மறப்பின்என் தோள்மேல்
கலங்கழியும் காரிகை நீத்து.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 182