கண்களே காத்திருங்கள்

கண்களே ...
உங்கள் பணி என்னவனை ...
பார்ப்பதற்காக இருப்பதே ....
எத்துணை துன்பம் வந்தாலும் ...
விழித்திருங்கள் என்னவன் ....
வருவான் .....!!!

என் கண்கள் ...
என்னவனை கண்டதும் ....
மெலிந்த உடலும் தோலும் ...
பொழிவுபெரும்....
கண்களே காத்திருங்கள் ....!!!
+
குறள் 1265
+
அவர்வயின்விதும்பல்
+
காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்
நீங்கும்என் மென்தோள் பசப்பு.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 185

எழுதியவர் : கே இனியவன் (10-Jun-15, 8:15 am)
பார்வை : 106

மேலே