வரமாய் வந்தவன் நீ

வலிகள் கண்ட வாழ்வில்
வழிகாட்டியாக வந்தாய்...
ஒழிந்து போன நாட்களில்
ஒளி விளக்காக்கி நின்றாய்...

முட்களின் மடியில்
துயில்கொண்டேன் - நீயோ
மலர் மெத்தை
விரித்து சென்றாய்...

சோகத்தின் நிழலில்
சோர்ந்திருந்தேன் - நீயோ
சொர்கத்தின் வாசல்
காட்டிச் சென்றாய்...

கண்ணீரின் கரைகளில்
கலந்திருந்தேன் - நீயோ
பன்னீரின் வாசனை
பரப்பி சென்றாய்...

வேதனை கடலில்
மூழ்கியிருந்தேன் - நீயோ
வேதமாய் வார்த்தைகள்
இயம்பிச் சென்றாய்...

சுட்டெரிக்கும் வெயிலில்
எனக்கு நிழலாய்
வந்தவன் நீ!..- என்
வாழ்வுக்கே வரமாய்
வந்தவன் நீ!..............

எழுதியவர் : கவிப் பிரியை - Shah (16-Jun-15, 9:14 pm)
பார்வை : 1402

மேலே