மண்டியிட்டு கிடக்கிறேன்

அவளது தாலாட்டை
தலையணையாகவும் -அவள்
தாய் பாசத்தை போர்வையாகவும்
கொண்டு உறங்கிய
நாட்களை எண்ணும்
பொழுதெல்லாம் நெஞ்சம்
கனத்து போகிறது....
விழிகளோ அழ யாசகம்
கேட்டு விம்மி நிற்கிறது...
ஆனால் அன்றொரு
நாள் அவள் கூறினாள்
பிள்ளைங்க அழுதா
செத்தாலும் பெத்தவ
நெஞ்சு தாங்காதாம்....
கூறிவிட்டு சென்றுவிட்டாள் அவள்...
ஒரு முறையாவது
என் சோகத்தை போக்க
அழுது கொள்கிறேன்
என்று ஒவ்வொருமுறையும்
அவள் புகைப்படத்திற்கு
முன் மண்டியிட்டு கிடக்கிறேன் நான்...

எழுதியவர் : இந்திராணி (18-Jun-15, 1:22 pm)
பார்வை : 202

மேலே