எல்லாம் தந்தாய் எந்தையே

எல்லாம் தந்தாய் எந்தையே -நீ
எல்லாம் தந்தாய் எந்தையே...
உயிர்பெற்ற நான்
உருப்பெறும் முன்னே-என்
தாயின் வயிற்றை
தடவி மகிழ்ந்தாய்....!
பிரசவ வலியில்
தாயவள் சோர்ந்தவேளை
கரம்கூப்பி நின்றெனை
வரவேற்று ஊக்கம் தந்தாய்...!
தவழும் பொழுதும்
தளரநடை பழகும்போதும்
தன்னம்பிக்கை விதைத்து
தள்ளிநின்று ரசித்தாய்...!
அடம்பிடித்த சிறுவன் என்னை
அதட்டி பள்ளிஅனுப்பி வைத்து
வாழ்ந்துநீ கற்ற அறிவை
கற்றுநான் வாழவைத்தாய்..!
மனக்கோயில் கருவறையில்
எப்பொழுதும் தொழுகிறேன்
வாழும் வழிகாட்டும்
வாழும்தெய்வம் உன்னை...!!

எழுதியவர் : காசி தங்கராசு (22-Jun-15, 2:04 am)
பார்வை : 69

மேலே