காதலனாய்

கண்கள் மூடி நடித்தேன்
பாத்திரங்கள் பல,
விழிகள் விலகிய வேளை
முன் நீயிருக்க,
தோழமையை தொலைத்து
உன் தோள் சாயவே
துடிக்கிறது மனம்-காதலனாய்..

உன் ஈரிதழ்
என்றேனும் காதலை
பிதற்றும் அதிசயம்
நாளிதழில் வருமென
நாள் தோறும் வாசிக்கிறேன்
நாளிதழையும்
உன் ஈரிதழையும்-காதலனாய்..

என்னை தவிர்த்த
என் நிழலும்
தேடி வந்தது உன்னை,
சமரசத்திற்காக..
நிஜத்தை மறுக்கும்
உன்னிடத்தே
நிழல் மட்டும் வெல்லுமா??
அல்ல
உன் நினைவு
நித்தமும் என்னை கொல்லுமா??

குருஞ்செய்திக்கும் வழியில்லை,
உன் குரல் கேட்கவும் வழியில்லை,
முகநூலிலும் நாம் நட்பில்லை,
நடப்பில் உன் முகம் காணவே வழியில்லை..
வழியில்லை
நீ நடந்த தடங்கள் தொடர,
வேறு வழியில்லை
உன் நினைவை தவிர நான் தொடர- காதலனாய்..

எழுதியவர் : முருகேசன் சத்தியமூர்த்தி (7-Jul-15, 4:00 pm)
Tanglish : kaathalanaai
பார்வை : 72

மேலே