மோட்டுவளைச் சிந்தனைகள் - 18

அறையின்
நடுவே
அகஸ்மாத்தாகக்
கிடக்கும்
ஒரு வாழைப்பழத்தோலை
குப்பைக்கூடையில் போட
எனக்குச்
சோம்பேறித்தனமாய்
இருக்கிறது
தானாக எழுந்து
அதுவாவது
குப்பைக்கூடைக்குப்
போகுமென்று பார்த்தால்
அது,
என்னைவிட
மகாச் சோம்பேறியாய்
இருக்கிறது

எழுதியவர் : குருச்சந்திரன் கிருஷ் (10-Jul-15, 9:28 am)
பார்வை : 143

மேலே