இரவின் காதலி
நட்டநடு ராத்திரி 12மனி
உன் நினைப்பால என்னோட தூக்கத்துக்கு சனி
கனவுலயும் தூங்கல கண்ண முளிச்சும் பாக்கல
உன் நெனப்ப மட்டும் மனச விட்டு எப்பயுமே இரக்கல
ஆந்தை கண்ண உருட்டுற
அரக்கி போல சிரிக்குற
என் மனசெல்லாம் நெறஞ்சு
நின்னு அணுஅணுவா வதைக்கிற
அழகினு உன்ன சொல்ல
கவி இல்ல நானடி
கட்டிபிடிச்சு பேப்பரோட
சண்ட போட்டதில்லடி
சிவப்பு சாயம் பூசும் போது
கறுத்து போன உதடு
அது பூசாமலே இருந்திருந்தா
இளஞ்சிவப்பு கலரு
சங்கு இல்ல கழுத்து
அது வளைந்திருக்கும் குருத்து
கெண்டகால பாக்கையிலே
கிறங்கி போகுது மனசு
சிலைக்கு கூட பெரும
அட உன்னோட ஒப்புகொண்டா
உன்ன நெனச்சா பண்ணமாட்டேன்
எப்பையும் தப்புதண்டா....
--------சாரு சரண் CJ